Thursday, September 18, 2014

'கத்தி' திரைப்பட பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.



கத்தி திரைப்படப்பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பாடலின் ஆல்பம் வெளியாகி ஆறுமணி நேரத்தில் ஐ-டியூனின் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துவிட்டது. அனிருத்தின் 6-வது படமும் தொடர்ந்து வெற்றிபெற்றுள்ளது.

செல்பி புல்லா பாடல்


நீ யாரோ பாடல்


பேட் ஐஸ்


ஆத்தி

கத்தி தீம்


கத்தி பட டீசர்


Wednesday, September 17, 2014

நான் நலமாக இருக்கிறேன்: கமல்ஹாசன்



தான் நலமாக இருப்பதாகவும், உணவு ஒவ்வாமை காரணமாகவே மருத்துவமனையில் உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு ....

Tuesday, September 16, 2014

கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.


உணவு ஒத்துகொள்ளாமல் ஏற்பட்ட உடல்நல குறைவால் உலகநாயகன் கமல்ஹாசன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலையில் அனுமதிக்கபட்டார். கவலைபடுவதற்கு எதுவும் இல்லை என்றும் தற்போது நன்றாக உடல்நலம் தேறிவருவதாகவும், இன்றோ அல்லது நாளை காலையிலோ மருத்துவமனையைவிட்டு திருப்பிவிடுவாரென்று செய்திகள் தெரிவிக்கின்றன.


உலகநாயகன் டாக்டர் கமல்ஹாசன் பூரண நலமடைந்து படபிடிப்பில் கலந்துகொள்ள நமது விருப்பத்தை தெரிவித்துகொள்வோம்.

Monday, September 15, 2014

"ஐ" படத்தின் டீசர்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "ஐ" படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது


சென்னையில் அர்னால்ட்



இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள "ஐ" படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இன்று மாலை நடைபெறுகிறது.இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் அர்னால்டு இன்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை இயக்குனர் ஷங்கர் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் வரவேற்றனர். பின்னர்  முதல்வர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் நடிகர் அர்னால்ட் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அர்னால்ட் , அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவருடனும் சகஜமாக பழகிய அர்னால்ட்.



சென்னை நேரு விளையாட்டு அரங்கின் வெளியே கூடியுள்ள கூட்டம். 


Saturday, September 13, 2014

2013 வருடத்திற்கான தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகளின் முடிவுகள்.



மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடந்துகொண்டிருக்கும் தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள் (SIIMA விருதுகள்) விழாவில் 2013 வருடத்திற்கான சிறந்த  தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு தற்போது விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருதுகளின் விவரங்கள்:

சிறந்த திரைப்படம் : பரதேசி


சிறந்த இயக்குனர்  : பாலா (பரதேசி படத்திற்காக)

சிறந்த நடிகர் : தனுஷ் (மரியான் படத்திற்காக)

சிறந்த நடிகை : திரிஷா (என்றென்றும் புன்னகை படத்திற்காக)

சிறந்த இசையமைப்பாளர் : அனிருத் (எதிர்நீச்சல் படத்திற்காக)

 சிறந்த துணை நடிகர் : ஆர்யா (ஆரம்பம் படத்திற்காக)

 சிறந்த துணை நடிகை : தன்சிகா (பரதேசி படத்திற்காக)

சிறந்த அறிமுக நடிகர் : திலீபன் (வத்திகுச்சி படத்திற்காக)

சிறந்த அறிமுக நடிகை : ஐஸ்வரியா அர்ஜுன் (பட்டத்து யானை படத்திற்காக)


தமிழக முதலமைச்சரை சந்திக்க விரும்பும் அர்னால்ட்



செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் நடக்க உள்ள ஷங்கரின் ஐ பட ஆடியோ விழாவில் கலந்து கொள்ள இருக்கும் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். இது பற்றி ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கூறுகையில், கலிபோர்னியா மாகாண கவர்னராகவும் இருக்கும் அர்னால்ட், தமிழக முதல்வர் முதல்வர் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்திக்க வேண்டும் என கூறி உள்ளார். இதற்காக அர்னால்ட்டின் அதிகாரிகள் முதல்வர் அலுவலகத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். அத்துடன் ரஜினியையும் அவர் சந்திக்க உள்ளார். ரஜினியையும் இந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்க படுகிறது.
ஐ பட ஆடியோ விழா சராசரி ஆடியோ விழாக்களைப் போன்று இல்லாமல், ஒரு கலை நிகழ்ச்சி போன்று நடத்தப்பட உள்ளதாக கூறி உள்ள ஆஸ்கார் ரவிச்சந்திரன், இதில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு இப்படத்தில் திரைக்கு பின் இருந்து பணியாற்றிய நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும், படத்தின் பேஷன் டிசைனர் நடத்தும் பேஷன் ஷோவும் நடத்தப்பட உள்ளது என கூறுபவர், இந்த நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாராதா மற்றொரு ஆச்சர்யமும் நடக்க உள்ளதாக சஸ்பென்ஸ் வைக்கிறார்

Friday, September 12, 2014

ஐ - அரசன்


பன்னாட்டு தரம். பெரும் எதிர்பார்ப்பில் ஐ..





பூஜை பட டீசர்




பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால். அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறாராம்.தமிழகத்தில் உள்ள என்கவுண்டர் ஸ்பெஷலிஸ் போலீஸ் அதிகாரிகளிடம் நேரில் சென்று அவர்களது அனுபவத்தை கேட்டு தெரிந்து வருகிறார் விஷால். இந்த கேரக்டருக்காக மிகவும் சிரமப்பட்டு இயல்பாக நடிக்க முயற்சி செய்வதாக கூறுகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கோயமுத்தூர் பெண்ணாக நடிக்கிறார். கோவை 100 அடி ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில்  பூஜை பட சூட்டிங் நடந்து வருகிறது. இப்படம் குறித்து  டைரக்டர் ஹரி கூறியதாவது:- பூஜை படம் என்னுடைய 13-வது படம். இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாகவும், நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாகவும், நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா, சித்தாரா, கவுசல்யா உள்பட பல நடிகர்- நடிகைகள் நடிக்கிறார்கள். இந்தப் படம் குடும்ப சென்டிமெண்ட்- ஆக்ஷன் கொண்ட படம்.  படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் படமாக்கப்படுகிறது. இதன் பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இது கோவையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படம். என்று கூறினார்.


Saturday, August 30, 2014

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்



நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு பேசிய மர்ம ஆசாமி நபர், திருவான்மியூரில் உள்ள அஜீத்  வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் அது வெடிக்கும் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அஜீத் வீட்டுக்கு விரைந்தார்கள். வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்  வரவழைக்கப்பட்டது. அஜீத்  வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தியபின்னர்  வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது.
     ஆனாலும் அஜீத் வீட்டிற்கு பாதுகாப்பு போடபட்டு உள்ளது. வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபர் விரைவில் பிடிபடுவார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Friday, August 29, 2014

சர்வதேச காவல் துறையின் புதிய தூதரானார் நடிகர் ஷாரூக் கான்!


பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்,  சர்வதேச காவல் துறையின்(இன்டர்போல்) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே  நடிகர் ஜாக்கி சான் இந்த விழிப்புணர்வு பிரச்சார தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு சர்வதேச பிரச்சாரத்திற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் ஷாரூக் கான் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பேசிய ஷாரூக், "இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை சிறந்த கவுரவமாக கருதுகிறேன்" என்றார்.

தீபாவளியை மகிழ்விக்க வரும் 'ஐ' படம்



ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் '' படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டவுடனே இந்த படம் மீண்டும் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துவிட்டது. சுமார் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம் ஹாலிவுட் படங்களின் தரத்திற்கு நிச்சயம் இருக்கும் என்கிறார்கள்.  படத்தில் பல வெளிநாட்டுக் கலைஞர்கள் பணிபுரிந்திருக்கிறார்கள். அதனால் படத்தை தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆகிய இந்திய மொழிகள் தவிர உலகின் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'Avatar', 'Lord of the Rings', 'Hobbit' உள்ளிட்ட படங்களுக்கு ஒப்பனை செய்த Weta Workshop என்ற நிறுவனம் '' படத்தில் பணியாற்றி வருகிறது. Stan Winstion Studios எப்படி 'எந்திரன்' படத்தில் பணியாற்றியதோ, அதைப் போன்று '' படத்தில் Weta Workshop பணியாற்றுகிறது. விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். மிக மிக ஒல்லியான தேகம், சராசரியான உடலமைப்பு, பின்னர் கட்டு மஸ்தான உடல் என படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப அவ்வப்போது அவருடைய உடலமைப்பை மாற்றி வருகிறாராம். ஷங்கர், விக்ரமின் இந்த ஈடுபாட்டை மிகவும் பாராட்டியிருக்கிறார். விக்ரமின் ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சனின் உடை, நடிப்பு என அவரையும் வெகுவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அர்னால்டுடன்  '' படத்தின் இணை தயாரிப்பாளர் ரமேஷ் பாபு

இதற்கிடையே  படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அதை ஏற்றுகொண்ட  அர்னால்டு, சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் '' இசை வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என்றும் ஆஸ்கர் ஃபிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்குப் பதிப்புக்கான '' இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஜாக்கி சான் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, August 25, 2014

‘கத்தி’ படப்பாடல் வெளியிட்டு விழா தேதி அறிவிப்பு



கடந்த சில மாதங்களாக பரபரப்புடன் பேசபட்டுவரும் ‘கத்தி’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னை லீலா பாலசில்  செப்டம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. லண்டனில் நடைபெறுவதாக இருந்த இந்த விழா மாற்றப்பட்டுள்ளது. படத்தின் ஆல்பத்தை, இந்த வாரத்திற்குள் பதிவுசெய்துமுடிக்க இசைஅமைப்பாளர் அனிருத் மும்முரமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. விழாவின்போது, அனிருத்தின் நேரடி இசை நிகழ்ச்சி ஒன்றும் இருக்குமென்றும் தெரிகிறது. அஞ்சான் பட இசை வெளியிட்டின்போது வரத்தவறிய சமந்தா இந்த விழாவிற்கு வருவார் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

Sunday, August 24, 2014

பத்ம பூஷன் ரிச்சர்ட் அடென்போரோ மரணம்.



ஆங்கில திரைப்பட நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ரிச்சர்ட் அடென்போரோ
(29ஆகஸ்ட்1923 - 24ஆகஸ்ட்2014) நேற்று காலமானார். ‘காந்தி’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இவர், இந்த படத்திற்காக இரண்டு அகடமி விருதுகள் பெற்றவர். மேலும் நான்கு பாப்டா விருதுகள் மற்றும் நான்கு கோல்டன் க்ளோப் விருதுகள் பெற்றிருக்கிறார். நடிகராக இவர் நடித்த ‘பிரைட்டன் ராக்’, ‘தி கிரேட் எஸ்கேப்’, ’10 ரிலிங்டோன் பிளேஸ்’ ‘மிரக்கில் ஆன் 34த் ஸ்ட்ரீட்’ மற்றும் ‘ஜுராசிக் பார்க்’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் என்றும் நீங்காத அளவு பதிந்தவை. ஆரம்ப காலத்தில் இரண்டாம் உலகபோரின் போது ராயல் விமான படையில் விமானியாக தனது வாழ்கையை ஆரம்பித்த ரிச்சர்ட் அடென்போரோ, தனது திரைப்பட வாழ்க்கையை 1942 ல் ‘இன் விச் வி சர்வ்’ என்ற படத்தில் மாலுமியாக நடித்து ஆரம்பித்தார். 1947 ல் ‘பிரைட்டன் ராக்’ என்ற படத்தில் இவர் நடித்த பிங்கி பிரவுன் என்ற வேடம் இவரது திரை வாழ்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1949ல், இவர், பிரிட்டனின் ஆறாவது சிறந்த வசூல் நடிகராக தேர்ந்தெடுக்கபட்டார். 1983 ல், இந்தியா, இவருக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.


Saturday, August 23, 2014

இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு புதிய கவுரவம்



இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு இது ஒரு மகிழ்ச்சியான தருணம். இவரது இயக்கத்தில் வெளிவந்த 'சென்னை 600028' உலக அளவில் பிரபலமாகியுள்ளது. உலகம் முழுவதும் வெளியான கிரிக்கெட் சார்ந்த படங்களில் சிறந்த 5 தருணங்கள் என பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான 'தி கார்டியன்' வெளியிட்டுள்ள பட்டியலில், வெங்கட் பிரபுவின் சென்னை-28 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தைப் பற்றி தி கார்டியனில், "காதல், நட்பு மற்றும் கிரிக்கெட்டைப் பற்றிய வெங்கட்பிரபுவின் இந்த முதல் திரைப்படத்தில், படத்தின் முக்கியப் பாத்திரம் ஒன்று, எதிரணியினரின் பகுதிக்கு குடிபெயர்ந்து செல்லும் காட்சி அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவிலிருந்து 'லகான்' மற்றும் 'சென்னை-28' ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலின் முதலிடத்தில் இருப்பது ஹிட்ச்காக் இயக்கத்தில் வெளியான 'தி லேடி வேனிஷஸ்' என்ற திரைப்படம். ஹிட்ச்காக் படத்தோடு, தன்னுடைய திரைப்படமும் பட்டியலில் இணைந்திருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமையாக பகிர்ந்துகொண்டுள்ளார் வெங்கட் பிரபு.

தனது முதல் படத்திலிருந்தே ரசிகர்களின் முழுமையான வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் வெங்கட்பிரபு. ஒரு நடிகராக, பாடகராக இவர் பெற்ற வெற்றிகளை விட, இயக்குநராக பெற்ற வெற்றிகள் அதிகம். பெரும்பாலும் இளைஞர் பட்டாளத்தையே தனது ரசிகர் வட்டமாக வைத்திருக்கும் வெங்கட்பிரபு, அஜித் குமாரை வைத்து இயக்கிய 'மங்காத்தா'வினால், பன்மடங்கு அந்த வட்டத்தைப் பெரிதாக்கிக் கொண்டார்.