Friday, August 29, 2014

சர்வதேச காவல் துறையின் புதிய தூதரானார் நடிகர் ஷாரூக் கான்!


பாலிவுட் நடிகர் ஷாரூக் கான்,  சர்வதேச காவல் துறையின்(இன்டர்போல்) விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே  நடிகர் ஜாக்கி சான் இந்த விழிப்புணர்வு பிரச்சார தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு சர்வதேச பிரச்சாரத்திற்கு தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் முதல் இந்தியர் ஷாரூக் கான் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி பேசிய ஷாரூக், "இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருப்பதை சிறந்த கவுரவமாக கருதுகிறேன்" என்றார்.

No comments:

Post a Comment